23 செப்., 2013

பெற்றோரைப் பேணுவோம்



-எம். ஷம்சுல்லுஹா
 
தாய் படுகொலை, தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை என்றெல்லாம் செய்தி வெளிவருவது இன்று சர்வ சாதாரணமாக விட்டது. பரபரப்பாக பத்திரிகையில் வெடித்துச் சிதறும் இந்த செய்"தீ'க்களைப் பார்க்கிறோம். கொலையாளி யார் என்று படித்துப் பார்த்தால் பெற்ற மகனே கொலை செய்திருக்கின்றான் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மாதா பிதா குரு தெய்வம் என்று முதலில் மாதாவையும் கடைசியில் தெய்வத்தையும் தள்ளி பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகின்ற தமிழகத்தில் தான் இந்தக் கோர நாடகம் பட்டப் பகலில் பலருக்கும் முன்னிலையில் அரங்கேறுகின்றது. இது தாய் தந்தையர் மீது அவர்களது பிள்ளைகள் நடத்துகின்ற உச்சக்கட்ட கோர கொலை வெறித் தாக்குதலாகும்.

இதற்கு அடுத்ததாக இடம் பெறும் கொடுமை அந்தப் பெற்றோர்களை அடிப்பது, அவர்களுக்கு உண்ண உணவு கொடுக்காது, உடுத்த உடை கொடுக்காது துன்புறுத்துவதாகும்.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறும் கொடுமை, அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகும். அவர்கள் நோய்வாய்ப்பட்டு அல்லலுறும் போது அவர்களை நா கூசாமல், "சனியனே! தொலைந்து போக வேண்டியது தானே! செத்து தொலை!'' என்று அவர்கள் மீது எள்ளும் கொள்ளுமாய் - கொதிக்கும் எண்ணையாய் எரிந்து விழுவது பலருக்கு பழகிப் போன ஒரு பாவமாகி விட்டது.

இது போன்று திட்டுவது மூன்றாவது கட்டக் கொடுமை என்று கொள்ளலாம். இந்த மூன்றாவது கட்டக் கொடுமையில் முஸ்லிம்கள் அதிகமான அளவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள இரு தீமைகளில் முதலாவது தீமை முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லை. இரண்டாவது மிகக் குறைந்த அளவிலும் மூன்றாவது தீமை மிக அதிக அளவிலும் இடம் பெறுகின்றது. இதற்குக் காரணம் இதை ஒரு பெரும் பாவமாகக் கருவதுவது கிடையாது. அதனால் தான் இந்தத் தீமை சர்வ சாதாரணமாக முஸ்லிம்களிடம் பரவி நிற்கின்றது.

ஆனால் இஸ்லாம் இதை வெறும் பாவமாக அல்ல! பெரும் பாவமாகக் கருதுகின்றது. அதனால் தான் திருக்குர்ஆனில் தாய், தந்தையர்களுக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய அறக் கடமைகளைப் பற்றி, அருட்பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 17:23,24)

சீ! என்று கூறாதே என்று சொல்லி தனது போதனையை அல்லாஹ் துவக்குகின்றான். அத்துடன் மேற்கண்ட பிரார்த்தனையையும் கேட்குமாறு கட்டளையிடுவதன் மூலம் நம்முடைய சின்னஞ்சிறிய பிஞ்சுப் பருவத்தில் கொஞ்சு மொழி பேசி, கனிவுடனும் கருணையுடனும் அவர்கள் நம்மை வளர்த்த அந்தக் காலகட்டத்தைக் கொஞ்சம் நமது காய்ந்து போன கல் மனங்களில் நினைவு எனும் நீர்த்திவலைகளைக் கொண்டு பசுமைப் படுத்திவிடுகின்றான்.

மனிதா! நீ பிறப்பதற்கு முன் அந்தத் தாயின் கருவில் கனத்து, அவளின் கண்களில் தூக்கம் தழுவுவதைத் தடுத்தாய்! பிறந்த பிறகு கைகளிலும் மடியிலும் மார்பிலும் தவழ்ந்து அவளின் இராப் பொழுது நித்திரையைக் கலைத்தாய்! உனக்கு உடலில் ஒரு வலி என்றால் உன் தாயும் தந்தையும் இரவில் தூக்கமின்றி எப்படி தவியாய் தவித்தனர் என்று அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்க்கும் வகையில் அதை நமது மனத் திரையில் கொண்டு வரச் செய்கின்றான்.

இதையெல்லாம் மனிதன் ஒரு கணம் எண்ணிப் பார்க்கும் போது ஒரு போதும் தாய் தந்தையரைத் திட்டுவதற்குத் துணிய மாட்டான். அதிலும் குறிப்பாக மனிதன் தன் பெற்றோர் மீது பொறுமை மேற்கொள்ள வேண்டிய கட்டம் அவர்கள் தள்ளாத வயதில் நோய் வாய்ப் படுக்கையில் கிடந்து அல்லலுறும் போது தான். படுக்கையை அவர்களது சிறுநீறும், மலமும் நனைத்து துர்வாடை கிளம்பி நம்மை முகஞ் சுளிக்கச் செய்யும்.

வாய், "சீ' என்ற வார்த்தையை முனுமுனுக்கச் செய்யும். நம்முடைய தாய் தந்தையரின் படுக்கையை, ஆடைகளை எத்தனை முறை நாம் சிறுநீரால் நனைத்து அவர்களைக் குளிரில் நடுங்கச் செய்தோம், நமது குடலிலிருந்து புறப்பட்ட சாணத்தால் அவர்களது ஆடையில் சந்தனம் பூசினோம் என்பதை நாம் அந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தோமானால் இந்த முகச் சுளிப்பும் முனுமுனுப்பும் பறந்து போய்விடும்.

இங்கு தான் அல்லாஹ் நம் வாயிலிருந்து வார்த்தைகள் "சீ' எனும் வடிவத்தில் கூட வந்து விடக் கூடாது என்று கூறுகின்றான். அவர்கள் ஓடியாடித் திரிந்த காலகட்டத்தில் நம்முடைய வார்த்தைகள் அவர்களைப் பெரிதாகப் பாதித்து விடாது. அதனால் அந்த சமயத்தில் திட்டலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அது எப்போதுமே கூடாது தான். குறிப்பாக அவர்கள் முதுமை அடைந்த பருவத்தில் இதுபோன்ற சின்னச் சின்ன எரிச்சல் வார்த்தைகளைக் கூட நாம் பயன்படுத்தி விடக் கூடாது என்று அல்குர்ஆன் நம்மை எச்சரிக்கை செய்கின்றது.

இதன் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் விஷயம் "சீ' என்ற வார்த்தையைக் கூட தாய் தந்தையருக்கு எதிராகக் கொட்டி விடக் கூடாது எனும் போது - வாயே நீளக் கூடாது எனும் போது கை நீளலாமா? ஒரு போதும் கூடாது. இதன் தீமையை இன்னும் நாம் உணர வேண்டுமாயின் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்க்க வேண்டும்.
பெரும் பாவங்களின் பட்டியலில் தாய் தந்தையருக்கு மாறு செய்வதையும் ஒரு பெரும் பாவமாக நபி (ஸல்) அவர்கள் கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு வரும் பாவம் வெட்டுவதா? அடிப்பதா? அல்லது திட்டுவதா? இந்தத் தீமைகளில் எதையுமே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.

இங்கு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வார்த்தைப் புலமை வெளிப்படுகின்றது. நறுக்குத் தெறிக்கும் வார்த்தைகளில் பெரும் கருத்துக் குவியலை உள்ளடக்கி, சுருக்கிப் பேசும் அதி அற்புத சொற்கலைத் திறன் அவர்களிடமிருந்து புறப்பட்டு வந்து நம்மை புல்லரிக்கச் செய்கின்றது.
பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?'' என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். "ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான்.

இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் இங்கு நேரடியாக ஒருவன் தன் தாயையோ தந்தையையோ திட்டுவதைக் குறிப்பிடவில்லை. இவன் மற்றவனைத் திட்டும் போது, அவனை மட்டும் திட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், "உனது தாயைத் தெரியாதா? தந்தையைத் தெரியாதா?' என்று இழுத்துப் பேசுவான்.

அது தான் தாமதம்! உடனே அவனும் அது போலத் திட்ட ஆரம்பித்து விடுகின்றான். இவ்வாறு அவன் திட்டுவதற்குக் காரணமாக இருந்ததால் அது நீயே நேரடியாகத் திட்டியதாகும். இது சாதாரண பாவமல்ல! சிறு பாவம் என்று ஒதுக்கப்படக் கூடிய பாவம் அல்ல! நரகத்தில் வீழ்த்தக் கூடிய பெரும் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

உலகமெல்லாம் தாய் தந்தையரைத் திட்டுவது பாவம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும், அடுத்தவருடைய தாய் தந்தையரைத் திட்டுவதை, அதன் மூலம் எதிர்விளைவை ஏற்படுத்துவதைப் பெரும்பாவம் என்று கூறுகின்றார்கள்.

* நீ எவருடைய தாய் தந்தையரையும் திட்டாதே!

* அதன் காரணமாக உன்னுடைய தாய் தந்தையரைப் பிறர் திட்ட வைத்து விடாதே!

இப்படி எதிர் விளைவால் திட்டுவது கூட பெரும்பாவம் எனும் போது நேரடியாக நீ  திட்டினால் அது பெரும்பாவத்திலும் பெரும்பாவம் என்ற உண்மையை உணர்த்துகின்றார்களே! அவர்கள் சாதாரண போதகர் அல்ல, தான் அல்லாஹ்வின் தூதர் என்பதை இதன் மூலம் நிரூபிக்கின்றார்கள். இது நாம் அறியக் கூடிய மேல் மிச்சமான விளக்கம்!

முக்கியமாக இதன் மூலம் நாம் தெரிய வேண்டிய அரிய விஷயம், தாய் தந்தையரைத் திட்டுவது ஒரு பெரும் பாவம் என்பது தான். அவர்களிடம் "சீ' என்ற வார்த்தையைக் கூடக் கூறாமல் அன்பான, அருளான, அழகான வார்த்தைகளைக் கூறி அவர்களை அரவணைத்து வாழ்வது அழகிய பண்பாகும்.
அல்லாஹ்விடத்தில் அருளைப் பெற்றுத் தரும் அறச் செயலாகும்.

19 செப்., 2013

பிரார்த்தனை பற்றி திருமறையும் நபிமொழியும்



அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!
(
நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப் பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற் காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 2:186)

உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள்.
(
அல்குர்ஆன் 40:60)

அல்லாஹ்வைத் தவிர பிறரிடம் கையேந்தி விடாதீர்கள்!

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)

அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவோ, தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, சக்தி பெறமாட்டார்கள்.
(
அல்குர்ஆன் 7:197)


ஒருங்கிணைந்த மனதுடன், பணிவாகப் பிரார்த்தியுங்கள்!

(
ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் -வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(
அல்குர்ஆன் 7:55)

பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள் அச்சத்தோடும் ஆசை யோடும் அவனை பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிகசமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)

அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்துவிடாதீர்கள்!

தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!.
(
அல்குர்ஆன் 39:53)

"
வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்.
(
அல்குர்ஆன் 15:56)

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
(
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

முறையான பிரார்த்தனை ஒருபோதும் வீண்போகாது!

நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடை யாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான்.
(
அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸி-ரலி, நூல்: அபூதாவூத், திர்மிதி)

ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப் பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும் ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.

1)
அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான்.
2)
மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான்.
3)
பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)

பாவமானதைக் கேட்காதீர்கள்!

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும்.
(
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)

நிதானமாகப் பிரார்த்தியுங்கள்!

உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் - உங்களுக்கே எதிரான- அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்.
(
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)

வலியுறுத்திக் கேளுங்கள்!

உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்கவேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.
(
அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : புகாரீ)

அவசரப்படாதீர்கள்!

நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
(
அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல்: புகாரீ, முஸ்லிம்)


11 செப்., 2013

ஆண்கள் சாப்பிட வேண்டிய 20வகை உணவு ??



ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!!!

ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும். இங்கே ஆரோக்கியம் ஊட்டும் இயற்கையான 20 வகை உணவுகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

1.      மிதவெப்ப பழங்களான மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களின் தோலில் பயோஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல சத்துப்பொருட்கள் உள்ளன. ஆகவே ஆண்கள் வெயில் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழங்களை தவறாது உட்கொள்வது அவசியம்.

2.      ஆரஞ்சு பழச்சாற்றை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி சத்தானது சிகப்பு குடமிளகாயில் உள்ளது. அதிலும் குடைமிளகாயை பச்சையாக உட்கொள்வது உடலில் பயோஃப்ளேவோனாய்டுகளைச் சேர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

3.      பலவகைகளில் மிகச்சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டின் நோய்தடுப்பு குணத்தை அறிந்திருக்கும் நம் உணவு முறை, அதன் மருத்துவ குணங்களை அறிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது சீரான இரத்த ஓட்டத்திற்கும் பூண்டு உதவுகிறது.

4.      பூவைப் போன்ற தோற்றத்தில் சுவையின்றி இருக்கும் இந்த பச்சைக்காய்கறி பல சத்துக்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஐசோதியோசைனேட்டுகள் ஈரலை ஊக்குவித்து என்ஜைம்கள் எனப்படும் நொதியூக்கிகள் சுரக்க வழி செய்து, புற்றுநோய் திசுக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.

5.      பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ள க்ரீன் டீ புற்றுநோய் செல்கள் பிரிவதை தடுக்கிறது. கருப்பு டீ எனப்படும் பால் கலக்காத டீயிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் பாலிஃபீனால்கள் அதிகமுள்ள க்ரீன் டீ வயிறு, நுரையீரல், குடல், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கிறது.

6.      சீஸ், தயிர், பால் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். ஒரு பகுதி பாலில் 8 அவுன்ஸ் கார்னிடைன் உள்ளது. அதுமட்டுமல்லாது கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற சத்துகளும் உள்ளன.

7.      நிரம்பாத கொழுப்புச் சத்துக்கள் அதிகம் உள்ள அவகேடோ பழம் இதயத்திற்கும், இரத்த நாளங்களுக்கும் வலு சேர்க்கிறது. அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பாதையை சீர் செய்கிறது.

8.      கார்னிடைன் அதிகமுள்ள மாட்டுக்கறியில் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

9.      செடிகளில் உள்ள லைகோபைன் எனப்படும் இயற்கையான வேதியியல் பொருள் தக்காளியில் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான இது விரை, நுரையீரல், வயிற்று புற்றுநோயை தடுக்கிறது.

10.  ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயினிலும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் பாலிஃபீனால்கள் உள்ளது. இது நோய் உண்டாக்கும் முடிவுறா மூலக்கூறுகளில் இருந்து காக்கிறது.

11.  விரை புற்றுநோய்க்கு இது மருந்தில்லை என்றாலும் புற்றுநோயின் பரவலை தடுக்க உதவுகிறது. அதிலும் தினமும் 8 அவுன்ஸ் மாதுளை சாறு குடித்தால், விரையின் ஸ்திரத்தன்மை மேம்படும்.

12.  நம் உணவில் பெரும்பங்கு வகிக்கும் முழு தானியங்களில் ஜிங்க் சத்து நிறைய இருக்கிறது. ஆண்களின் ஆண்தன்மையை மேம்படுத்த உதவும் துத்தநாகம் உடலில் குறைந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

13.  வேர்க்கடலையில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், சரும வறட்சி, மலட்டுத்தன்மை, மூளை திசுக்கள் குறைபாடு ஆகியவற்றை தடுக்கலாம்.

14.  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் உணவானது புரதத்திலும் சிறந்து விளங்குகிறது. அதிலும் மீனில் உள்ள புரதச்சத்து, HDL எனப்படும் இதய நோய்களை தவிர்க்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

15.  கேழ்வரகில் கால்சியம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 300 கிராம் கேழ்வரகில் 100 கிராம் கால்சியம் உள்ளது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதை கேழ்வரகு தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து, டிஸ்லிபிடிமியா, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது.

16.  கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவான சியா, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. அதே நேரம் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், திசுக்கள் குறைபாட்டை தவிர்த்து அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.

17.  சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் விரைப்பை புற்றுநோயை தடுக்கிறது. தினமும் 25 கிராம் சோயா சாப்பிடுவதன் மூலம் உடல் கொழுப்பை பெருமளவு குறைக்கலாம்.

18.  மொறுமொறுப்பான பூசணி விதைகளில் கலோரி அதிகமுள்ளது. 100 கிராம் பூசணி விதையில் 559 கலொரிகள் உள்ளன. மேலும் நார்ச்சத்து, தாதுக்களும், பலவகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.

19.  வெளியே கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும் உள்ள இளநீர், உடலின் மின்பகுளி அளவை சீராக வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் வயிற்றுப் போக்கின் மூலம் ஏற்படும் நீர் குறைபாடு ஆகியவற்றில் இருந்தும் காக்கிறது. அதுமட்டுமல்லாது மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.

20.  இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நுண்ணியிர்கள் வளர்வதை தடுக்கின்றன. டைப்-2 நீரிழிவு நோயை தடுக்கவும் லவங்கப்பட்டை பயன்படுகிறது.