14 டிச., 2015

தண்டுவட எலும்பு வால் பகுதி - அறிவியல் கூறும் உண்மை

நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம் !
உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது !
சொர்க்கம் நரகம் உண்டா....???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா...???
1400....ஆண்டுகளுக்கு முன்பு... முகமது நபிகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது
எழுத படிக்கத்தெரியாதமுகமது நபி இறைவனிடம் இருந்து... தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள்
அப்படி வந்த செய்திகள் தான் திரு குர்ஆன்
அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்
அப்படி அவர்கள்சொன்ன....பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு...[உள்வால்எலும்பு ]( ‪#‎coccyx_bone‬ )
முதுகுத் தண்டின் வேர் பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்”
இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களை கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே முடிவில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையே.
என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.
இதைத்தான்....1400 வருடங்களுக்கு முன்பே...அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும்நபிமொழி கூறி உள்ளார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப்பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின்
( #coccyx_bone )
நுனியைத்தவிர!.... அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான்
அதிலிருந்தே அவன்...
(மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான்... உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள்
மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு...
எலும்பைத் தவிர! அது (அவனது முதுகு தண்டின்வேர்ப்பகுதியிலிருக்கும்)
( #coccyx_bone )
உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும்
அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்
(ஹதீஸின் சுருக்கம்)அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5660 நன்றி
இது குறித்து இன்னும் மிக விரிவாக மற்றும் இயற்கை பற்றிய விஷயங்களுக்கு குர்ஆன் , நபி மொழிகள் பெரிதும் தூண்டுதலாகவே இருந்து வருகிறது
இதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பல உண்மைகளை துல்லியமாகவே கண்டறிந்து குர்ஆன் இறைவேதம் தான் என்பதையும் ஒப்புக் கொண்டு வருகிறார்கள் ...

22 அக்., 2015

படித்ததில் பிடித்தது தானே ?

சில சிந்தனைகள் வரிகள்
நடத்தை
உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்.
உங்கள் நடத்தை தான் அந்த இடத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளத் துணை  நிற்கும்!
சிரிப்பு
உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!
உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை!
பிறப்பும் இறப்பும்
நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா?
 இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்!
நீ சாதனை புரிய வேண்டுமா?
இன்றோடு நீ இறந்து போவாய் என எண்ணிக் கொள்.
காரணங்கள்
நம் வாழ்வில் நாம் அழுவதற்காக 100 காரணங்கள் உள்ளன!
நாம் சிரிக்க 1000 காரணங்கள் உள்ளன!
வாழ்க்கை :
வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது!
நாம் இறந்த பின் நம்மைய யாரும் மறக்கக்கூடாது!
கடிகாரம் :
இலக்கில்லாத வாழ்க்கை  - முள் இல்லாத கடிகாரம் போன்றது!
 ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளில் இரண்டு முறை சரியாக நேரம் காட்டும்!
மனிதனின் குறைபாடுகள் :
மாற்ற முடியாத, திருத்த முடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக்  கவலைப்படுவது,
தனது நம்பிக்கை, கொள்கைகளைப் பிறர் மேல் வற்புறுத்தி சுமத்துவது,
அற்ப வியங்களை உதறித் தள்ள மறுப்பது,
மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது.    – இவையனைத்துமே!
மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.
வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும். தன் உடலில் யாருக்குத் தான் விருப்பமில்லை.
மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும் வரை கோபம் தான் நிறைந்திருக்கும்.
துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்து விடும்.
இன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பல மடங்கு அதிகமாகி விடுகிறது.
நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.
அதனால், நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத் தான் இருக்கிறான். அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறி விடுகின்றன.
நல்லவரைப் பார்க்கும் போது பின்பற்ற நினையுங்கள்.
தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையானகாரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால் தான்.
அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம் தான்.
வெற்றி ஒரு வானவில். எட்டத்தில் இருப்பதால் தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

26 மார்., 2015

உம்ரா செய்வது எப்படி ?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபக்காத்துஹு
'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),   நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),   நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.
இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.
1. இஹ்ராம் :
மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும்.
(மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும்.
அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ
 اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.
2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ

 (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)
3. தவாஃப் செய்தல்:
மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.
அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும்.
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.
ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.
தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.
ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும்.
 (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!)
 இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.
4. தவாஃப் செய்து முடிந்தால்...?: தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.
இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.
தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.
5. ஸயீ செய்வது:
தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஃபாவை நெருங்கும் போது
, إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ
'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.
பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.
لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'.
பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மார்வாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும்.
(பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)
மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மார்வாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
6. ஸயீ முடிந்ததும்:
ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.
இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.
(குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)

உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!