9 பிப்., 2017

“காளான்” (Mushroom ) நம்மில் எத்தனை பேர் சாப்பிடுகிறோம்?

நம்மில் எத்தனை பேர் “காளான்” (Mushroom ) உணவை சாப்பிடுகிறோம்?, இதோ அதிகளவில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

**
#புரதச்சத்து அதிகம் இருக்கிறது, மேலும் இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இல்லை. நார்ச்சத்து மற்றும் இதிலிருக்கும் சில என்ஸைம்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் இருக்கும் எல்.டி.எல் (தீய) மற்றும் எச்.டி. எல் (நல்ல) எனும் இருவகையான கொழுப்புகளை கட்டுக்குள் வைக்கவும் காளான் பயனளிக்கிறது. இதனால் இதயக் கோளாறுகள் ஏற்படுவதை குறைக்க முடியும்

#இரத்த_சோகை உள்ள நபர்களிடம் இரும்புச்சத்து அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும். இதனால் மயக்கம், தலைவலி, நரம்பியல் செயல்திறன் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படலாம். காளானில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து 90% முழுமையாக உடலுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதனால் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் தூண்டிவிடப்படுகின்றன

#மார்பக_மற்றும்_புரோஸ்டேட்_புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகிறது

உயர்ரக கால்சியம் உள்ளது. இது #எலும்புகளின்_வலிமையை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது.

#ஊட்டச்சத்துக்கள்_Ergothioneine" எனும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

#பொட்டாசியம்_மற்றும்_ தாமிரம் (Copper)  அளவு அதிகமிருக்கிறது, இரத்த நாளங்களை இலகுவாக உணர செய்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் கூட குறைக்கப்படுகிறது

அதிகளவில் #கொழுப்பை_குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவும் மேலும், இயற்கையாக விளைவிக்கப்படும் காளானால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இதனால், இது உடல் எடையை குறைக்க ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது

#ஓர்_உடல்நல_பகிர்வு

7 பிப்., 2017

சத்துமாவு

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!

*இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை:*

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

*தேவையான பொருட்கள்:*


  • ராகி 2 கிலோ
  • சோளம் 2 கிலோ
  • கம்பு 2 கிலோ
  • பாசிப்பயறு அரை கிலோ
  • கொள்ளு அரை கிலோ
  • மக்காசோளம் 2 கிலோ
  • பொட்டுக்கடலை ஒரு கிலோ
  • சோயா ஒரு கிலோ
  • தினை அரை கிலோ
  • கருப்பு உளுந்து அரை கிலோ
  • சம்பா கோதுமை அரை கிலோ
  • பார்லி அரை கிலோ
  • நிலக்கடலை அரை கிலோ
  • அவல் அரை கிலோ
  • ஜவ்வரிசி அரை கிலோ
  • வெள்ளை எள் 100 கிராம்
  • கசகசா 50 கிராம்
  • ஏலம் 50 கிராம்
  • முந்திரி 50 கிராம்
  • சாரப்பருப்பு 50 கிராம்
  • பாதாம் 50 கிராம்
  • ஓமம் 50 கிராம்
  • சுக்கு 50 கிராம்
  • பிஸ்தா 50 கிராம்
  • ஜாதிக்காய் 2
  • மாசிக்காய் 2

*செய்முறை :*

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

*பயன்கள்*

1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

*குறிப்பு:*

6 மாதம் கெடாது

1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.