8 மார்., 2013

நிலவை பற்றி அறிந்து கொள்வோம்

-பூமியிலிருந்து 3,84,400 கி.மீ தொலைவில் உள்ளது.

-பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு கொண்டது.

-பூமியின் விட்டத்தில் கால் பங்கு கொண்டது.

-சராசரியாக 3,84,401 கிமீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது.

-சந்திரன் பூமியைச் சுற்றி வரவும், தன்னைத் தானே சுற்றி வரவும் 27.32 நாட்கள் ஆகிறது.

-நிலவில் காற்று மண்டலம் கிடையாது.

-நிலாவில் ஈரப்பசை உள்ளது ஆனால் திரவ நிலையில் நீர் இல்லை.

-நிலவின் மேற்பரப்பு கரடு முரடாக உள்ளதால் சூரியனின் ஒளியை குறைந்த அளவே பிரதிபலிக்கிறது இதனால் கண்ணுக்கு இதமாக நிலவின் ஒளி காட்சியளிக்கிறது.

-சந்திரனின் முக்கிய அம்சம் விண்கற்கள் மோதி உருவான கிண்ணக் குழிகள் ஆகும்.

-புவியிலிருந்து நாம் பார்க்க முடியாத மறு பக்கத்தை முதன் முதலில் நிழற்படங்களாக 1959 October மாதம் ஏவப்பட்ட LUNA-3 என்ற செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியது.

நிலாவின் அமைப்பு:

- நிலாவின் மேற்பரப்பில் மலைகள், சமவெளிகள்,பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், மிகத் தாழ்வான பள்ளங்கள் (Creaters) ஆகியவை உள்ளன.

-எவரெஸ்ட்டை விட உயரமான மலைச்சிகரம் 10,660 M உயரமான ஒன்று நிலவில் உள்ளது.

-காற்று மண்டலம் இல்லாததால் பகலில் 100டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவில் -173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது.

-APOLLO 11 என்ற விண்கலம் மூலம் July 20, 1969, at 20:18 UTC அன்று நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் காலடி எடுத்து வைத்தார். அவருடன் சென்றவர்கள் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கால்லின்ஸ்.