பாலியல் ரீதியாக பெண்கள்
துன்புறுத்தப்படுவதற்கு ஆடைகள் முக்கிய காரணமாக உள்ளது என்பதை மறுக்கக்
கூடியவர்கள் உடைதான் காரணம் என்றால் ஆறு வயது சிறுமி ஏன் பாலியல்
வன்முறைக்கு ஆளாக வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கின்றனர்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல தொடுதல் எது; கெட்ட தொடுதல் எது
என்று கற்பிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
இது சரியா? - சபுரா, சார்ஜா
சிந்தனைக் குறைபாடு காரணமாகவே இதுபோன்ற வாதங்களை முன் வைக்கிறார்கள். பெண்களின் ஆடைகள் காரணமாக பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்ற வாதம் பெரும்பான்மையாக அப்படி நடக்கிறது என்ற கருத்தில்தான் வைக்கப்படுகிறது.
அது மட்டுமே ஒரே காரணம் என்ற அர்த்தத்தில் வைக்கப்படுவதில்லை. இது அனைவருக்கும் தெரிந்தாலும் வேண்டுமென்றே அறியாதது போல்
நடித்துக் கொண்டு மேற்கண்ட வாதம் முன்வைக்கப்படுகிறது.
பீடி, சிக்ரெட், புகையிலை பான்பராக் பயன்படுத்தினால் கேன்ஸர் வரும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.
மேற்கண்டவைகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஏன் கேன்ஸர் வருகிறது?
மேற்கண்ட பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை என்று வாதம் வைத்து தாராளமாக புகையிலைப் பொருளை பயன்படுத்துங்கள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள்.
ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் டெங்கு காய்ச்சல் வருகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
டெங்கு காய்ச்சல் வந்த குழந்தையின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் டெங்கு வரவில்லை? அந்த வீட்டில் உள்ள கொசு மற்றவர்களையும் கடித்திருக்காதா? அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை? எனவே ஏடிஸ் கொசுவை தாராளமாக உற்பத்தி செய்யுங்கள் என்று மூளையுள்ள யாரும்
வாதம் செய்யமாட்டார்கள்.
இது போல் ஆயிரமாயிரம் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏறுக்குமாறாக சிந்திக்கின்றனர்.
ஒரு பெண் ஆண்களுக்கு வக்கிர எண்ணத்தைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் ஆண்களுக்கு சலனம் ஏற்படுமா? ஏற்படாதா?
தனிமை கிடைத்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாளா? இல்லையா?
உடற்கூறு நிபுணர்களும் இவ்வாறு ஏற்படும் என்கிறார்கள். நடை முறையிலும் இவ்வாறு நடப்பதை நாம் காண்கிறோம்.
கல்வி அறிவு கொடுத்தால் மதவெறி ஒழியும் என்று கூறுகிறார்கள். கல்வி அறிவு உள்ளவர்களே மதவெறி இயக்கங்களை உருவாக்கி வழிநடத்துவதால் கல்வியால் மதவெறி ஒழியாது என்று வாதம்
வைக்கலாமா?
படிப்பறிவு இல்லாததே குற்றங்களுக்குக் காரணம் என்று கூறினால் குற்றங்கள் செய்யும் படித்தவர்களின் பட்டியலை வாசித்துக் காட்டி படிப்பே தேவையில்லை என்று வாதிட்டால் அது சரியாகுமா?
பெண்களின் கவர்ச்சியான உடை ஆண்களை ஈர்க்கும் என்பது இயல்பானது. இவ்வாறு ஈர்க்கப்படும் ஆண்களில் அதிகமானவர்கள் சலனப்படுவதுடன் போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால் சிலர்
சலனத்துக்கு ஏற்ப காரியத்திலும் இறங்கி விடுவார்கள். அப்படி இறங்கினால் அந்தச் சம்பவத்துக்கு நிச்சயம் ஆடைதான் காரணம். இந்தக் கருத்தில் சொல்லப்படுவதைத் தான் முற்போக்காளர்கள் திசை திருப்புகிறார்கள்.
இப்படி வாதிடுவோர் பெண்களை பலவாறாக ரசித்து இன்புறும் நோய்க்கு ஆளானவர்களாக இருக்க வேண்டும் அல்லது பெண்கள் பால் ஆர்வமில்லாத ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அல்லது எதையும் மேலோட்டமாக மட்டுமே பார்க்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும்.
சராசரி மனிதனுக்கு மேலாக காமவெறி தலைக்கேறிய மிருகங்களும் மனித வடிவில் நடமாடுகின்றனர்.
அவர்களுக்கு சிறுமியாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும் முழுமையாக ஆடை அணிந்தவராக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.இத்தகையவர்களால் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை
இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஒருவகை மனநோயாளிகள் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
சராசரி மனிதன் அழகான கவர்ச்சியான பெண்களால்தான் ஈர்க்கப்படுவான்.
சராசரிக்கும் கீழே உள்ளவன் பிணத்துடன் கூட உறவு கொள்வான். இவனை அறிவுடையோர் ஆதாரமாகக் காட்டி பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி வாதிடமாட்டார்கள்.
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை சிறுமிகளுக்கு புரிய வைக்க முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும் . புரிய வைக்க முடியும் என்றாலும் அதனால் என்ன நன்மை? புரிந்து கொள்வதால் மட்டும் மனித மிருகங்களிடமிருந்து தப்பிக்க முடியுமா? சிறுமிகளின்
விருப்பத்துடன் தான் சீரழிவுகள் நடக்கின்றதா? அல்லது கதற கதற சீரழிக்கப்படுகிறார்களா?
சிறுமிகள் என்பது உடல் ரீதியாக பருவமடையாத சிறுமிகளையும் எடுத்துக் கொள்ளும். உடல் ரீதியாக பருவம் அடைந்து நாட்டின் சட்டப்படி மேஜராக ஆகாத 18 வயதுக்கு உட்பட்டவர்களையும்
எடுத்துக் கொள்ளும்.
முதல் வகை சிறுமிகளுக்கு பாலியல் சேட்டைகளால் துன்பம் ஏற்படுவதால் கெட்ட தொடுதல் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் மனித மிருகங்களிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
பருவமடைந்த சிறுமிகள்(?) என்றால் கெட்ட தொடுதலை நல்ல தொடுதல் என்று நம்பித்தான் பெரும்பாலும் உடன்படுகிறார்கள். 15வயதுப் பெண் இவனோடுதான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கும்
சம்பவங்களே இதற்குச் சான்றாகவுள்ளது.
எனவே முற்போக்காளர்கள் என்பவர்கள் மேலோட்டமாக மட்டுமே சிந்திக்கிறார்கள். இவர்கள் அறிவுடையோர் அல்ல.
http://www.onlinepj.com/
இது சரியா? - சபுரா, சார்ஜா
சிந்தனைக் குறைபாடு காரணமாகவே இதுபோன்ற வாதங்களை முன் வைக்கிறார்கள். பெண்களின் ஆடைகள் காரணமாக பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்ற வாதம் பெரும்பான்மையாக அப்படி நடக்கிறது என்ற கருத்தில்தான் வைக்கப்படுகிறது.
அது மட்டுமே ஒரே காரணம் என்ற அர்த்தத்தில் வைக்கப்படுவதில்லை. இது அனைவருக்கும் தெரிந்தாலும் வேண்டுமென்றே அறியாதது போல்
நடித்துக் கொண்டு மேற்கண்ட வாதம் முன்வைக்கப்படுகிறது.
பீடி, சிக்ரெட், புகையிலை பான்பராக் பயன்படுத்தினால் கேன்ஸர் வரும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.
மேற்கண்டவைகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஏன் கேன்ஸர் வருகிறது?
மேற்கண்ட பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை என்று வாதம் வைத்து தாராளமாக புகையிலைப் பொருளை பயன்படுத்துங்கள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள்.
ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் டெங்கு காய்ச்சல் வருகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
டெங்கு காய்ச்சல் வந்த குழந்தையின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் டெங்கு வரவில்லை? அந்த வீட்டில் உள்ள கொசு மற்றவர்களையும் கடித்திருக்காதா? அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை? எனவே ஏடிஸ் கொசுவை தாராளமாக உற்பத்தி செய்யுங்கள் என்று மூளையுள்ள யாரும்
வாதம் செய்யமாட்டார்கள்.
இது போல் ஆயிரமாயிரம் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏறுக்குமாறாக சிந்திக்கின்றனர்.
ஒரு பெண் ஆண்களுக்கு வக்கிர எண்ணத்தைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் ஆண்களுக்கு சலனம் ஏற்படுமா? ஏற்படாதா?
தனிமை கிடைத்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாளா? இல்லையா?
உடற்கூறு நிபுணர்களும் இவ்வாறு ஏற்படும் என்கிறார்கள். நடை முறையிலும் இவ்வாறு நடப்பதை நாம் காண்கிறோம்.
கல்வி அறிவு கொடுத்தால் மதவெறி ஒழியும் என்று கூறுகிறார்கள். கல்வி அறிவு உள்ளவர்களே மதவெறி இயக்கங்களை உருவாக்கி வழிநடத்துவதால் கல்வியால் மதவெறி ஒழியாது என்று வாதம்
வைக்கலாமா?
படிப்பறிவு இல்லாததே குற்றங்களுக்குக் காரணம் என்று கூறினால் குற்றங்கள் செய்யும் படித்தவர்களின் பட்டியலை வாசித்துக் காட்டி படிப்பே தேவையில்லை என்று வாதிட்டால் அது சரியாகுமா?
பெண்களின் கவர்ச்சியான உடை ஆண்களை ஈர்க்கும் என்பது இயல்பானது. இவ்வாறு ஈர்க்கப்படும் ஆண்களில் அதிகமானவர்கள் சலனப்படுவதுடன் போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால் சிலர்
சலனத்துக்கு ஏற்ப காரியத்திலும் இறங்கி விடுவார்கள். அப்படி இறங்கினால் அந்தச் சம்பவத்துக்கு நிச்சயம் ஆடைதான் காரணம். இந்தக் கருத்தில் சொல்லப்படுவதைத் தான் முற்போக்காளர்கள் திசை திருப்புகிறார்கள்.
இப்படி வாதிடுவோர் பெண்களை பலவாறாக ரசித்து இன்புறும் நோய்க்கு ஆளானவர்களாக இருக்க வேண்டும் அல்லது பெண்கள் பால் ஆர்வமில்லாத ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அல்லது எதையும் மேலோட்டமாக மட்டுமே பார்க்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும்.
சராசரி மனிதனுக்கு மேலாக காமவெறி தலைக்கேறிய மிருகங்களும் மனித வடிவில் நடமாடுகின்றனர்.
அவர்களுக்கு சிறுமியாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும் முழுமையாக ஆடை அணிந்தவராக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.இத்தகையவர்களால் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை
இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஒருவகை மனநோயாளிகள் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
சராசரி மனிதன் அழகான கவர்ச்சியான பெண்களால்தான் ஈர்க்கப்படுவான்.
சராசரிக்கும் கீழே உள்ளவன் பிணத்துடன் கூட உறவு கொள்வான். இவனை அறிவுடையோர் ஆதாரமாகக் காட்டி பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி வாதிடமாட்டார்கள்.
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை சிறுமிகளுக்கு புரிய வைக்க முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும் . புரிய வைக்க முடியும் என்றாலும் அதனால் என்ன நன்மை? புரிந்து கொள்வதால் மட்டும் மனித மிருகங்களிடமிருந்து தப்பிக்க முடியுமா? சிறுமிகளின்
விருப்பத்துடன் தான் சீரழிவுகள் நடக்கின்றதா? அல்லது கதற கதற சீரழிக்கப்படுகிறார்களா?
சிறுமிகள் என்பது உடல் ரீதியாக பருவமடையாத சிறுமிகளையும் எடுத்துக் கொள்ளும். உடல் ரீதியாக பருவம் அடைந்து நாட்டின் சட்டப்படி மேஜராக ஆகாத 18 வயதுக்கு உட்பட்டவர்களையும்
எடுத்துக் கொள்ளும்.
முதல் வகை சிறுமிகளுக்கு பாலியல் சேட்டைகளால் துன்பம் ஏற்படுவதால் கெட்ட தொடுதல் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் மனித மிருகங்களிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
பருவமடைந்த சிறுமிகள்(?) என்றால் கெட்ட தொடுதலை நல்ல தொடுதல் என்று நம்பித்தான் பெரும்பாலும் உடன்படுகிறார்கள். 15வயதுப் பெண் இவனோடுதான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கும்
சம்பவங்களே இதற்குச் சான்றாகவுள்ளது.
எனவே முற்போக்காளர்கள் என்பவர்கள் மேலோட்டமாக மட்டுமே சிந்திக்கிறார்கள். இவர்கள் அறிவுடையோர் அல்ல.